மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக இருவரும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2008ல் வெளியான 'Twenty:20' மலையாள படத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மம்முட்டி,மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் மற்றொரு மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.