ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய சினிமாவில் நம்பர் ஒன் திரைப்படமாக இப்போதும் கொண்டாடப்பட்டு வரும் படம் 'பதேர் பாஞ்சாலி'. சத்யஜித் ரே இயக்கிய படம். 1955ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுபிர் பானர்ஜி, கனு பானர்ஜி, கருணா பானர்ஜி இவர்களுடன் முக்கிய கேரக்டரில் நடித்தவர் உமா தேஸ்குப்தா. இவர் துர்கா என்ற இளம் பெண்ணாக நடித்தார். முக்கிய கேரக்டர்களுக்கு இணையாக அப்போது இவர் கேரக்டர் பேசப்பட்டது.
பதேர் பாஞ்சாலி படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. ஆனாலும் துர்கா கேரக்டர் இன்றவுளம் ரசிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. கோல்கட்டாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த உமா கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வந்தார். இந்த நிலையில் கோல்கட்டா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. உமாவின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உமா இறந்து விட்டாலும் துர்கா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.