தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய சினிமாவில் நம்பர் ஒன் திரைப்படமாக இப்போதும் கொண்டாடப்பட்டு வரும் படம் 'பதேர் பாஞ்சாலி'. சத்யஜித் ரே இயக்கிய படம். 1955ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுபிர் பானர்ஜி, கனு பானர்ஜி, கருணா பானர்ஜி இவர்களுடன் முக்கிய கேரக்டரில் நடித்தவர் உமா தேஸ்குப்தா. இவர் துர்கா என்ற இளம் பெண்ணாக நடித்தார். முக்கிய கேரக்டர்களுக்கு இணையாக அப்போது இவர் கேரக்டர் பேசப்பட்டது.
பதேர் பாஞ்சாலி படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. ஆனாலும் துர்கா கேரக்டர் இன்றவுளம் ரசிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. கோல்கட்டாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த உமா கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வந்தார். இந்த நிலையில் கோல்கட்டா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. உமாவின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உமா இறந்து விட்டாலும் துர்கா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.