ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல எடிட்டராக வலம் வந்த மகேஷ் நாராயணன் கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்த டேக் ஆப் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆக மாறினார். பிறகு தொடர்ந்து பஹத் பாசிலை வைத்து மாலிக், சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
தமிழில் முதன்முறையாக கமல் நடிக்கும் படம் ஒன்றை இவர் இயக்கப் போவதாக கடந்த வருடமும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மலையாளத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 16 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். இதில் அவரது முதல் பட கதாநாயகர்களான பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவருமே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “தமிழில் நிச்சயமாக கமல் படம் மூலம் தான் என்ட்ரி கொடுப்பேன். ஆனால் அதன் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். அந்த கதையை இப்போது நான் இயக்கி வரும் மோகன்லால், மம்முட்டி படத்திற்காக பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் நான் எழுதிய புதிய கதை. இந்த படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் தான் இருக்கிறார். அது மட்டுமல்ல, என் படத்தில் நடித்தவர்கள் என்பதால் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரையும் ஏதோ கருவேப்பிலை போல பயன்படுத்த மாட்டேன். அவர்களுக்கும் இந்த படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.