தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானாலும் தனது எளிமையான குணங்களால் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவர்ந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021 அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதிலேயே அவர் இந்த உலகை விட்டு பிரிந்தது அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீனே நீனே ராஜகுமாரா என்கிற அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பவன் பட் என்பவர் எழுத சுனில் கோஷி என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.