சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
மலையாள திரையுலகில் மம்முட்டி நடித்த பிக் பி என்கிற படத்தில் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சமீர் தாஹிர். அதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி மற்றும் சாய் பல்லவி துல்கர் நடித்த கலி என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ஒளிப்பதிவாளராக மாறிய இவர் தொடர்ந்து ஒளிப்பதிவாளராகவே பணியாற்றி வருகிறார். குறிப்பாக சூப்பர் மேன் கதையம்சத்துடன் வெளியான மின்னல் முரளி படத்தில் இவரது ஒளிப்பதிவு மிகுந்த வரவேற்பு பெற்றது. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படமான ஆவேசம் படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில் 2016ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறாராம் சமீர் தாஹிர். ஹீரோ வேறு யாரும் அல்ல.. இந்தமுறையும் துல்கர் சல்மான் தான். இதற்கான கதை உருவாக்கும் பணியில் சமீப நாட்களாக ஈடுபட்டு வரும் சமீர் தாஹிர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம் சமீர் தாஹிர்.