ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீப வருடங்களாக நடிகர் மம்முட்டி, நடிப்பையும் தாண்டி மம்முட்டி கம்பெனி என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார், இவரது தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகள் மற்றும் மம்முட்டிக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டே தயாராகி வருகின்றன, ‛நண்பகல் நேரத்து மயக்கம், பிரம்மயுகம், காதல் ; தி கோர்' என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் இளம் அறிமுக இயக்குனரும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‛குறூப்' படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவருமான ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார்.
வழக்கம் போல இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை ஈர்த்ததால், தானே இந்த படத்தை தயாரித்தும் வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் நடிகரான விநாயகன் நடித்து வருகிறார். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‛கலம்காவல்' என டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் மம்முட்டி சிகரட்டை தனது வாயில் வைத்து கடிப்பது போன்று அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் மீது ஒரு விதமான ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.