கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது. அவரும் ஷோபனாவும் இணைந்து தருண் மூர்த்தி இயக்கத்தில் நடித்துள்ள 'தொடரும்' திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஹிருதயப்பூர்வம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். கேரளாவில் இதன் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்த அவர் அடுத்ததாக டில்லிக்கு கிளம்பி சென்று மம்முட்டியுடன் தான் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் மோகன்லால், மம்முட்டி இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். பஹத் பாசில் நடித்த 'டேக் ஆப், சீ யூ சூன், மாலிக்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தில் மம்முட்டி, நயன்தாரா இருவரும் நடிக்கும் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.