ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கதைக்காக மட்டுமே ஹீரோக்களை தேடிப்போகும் வெகு சில இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அவர் மீண்டும் அவரை வைத்து 'நேர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தபின் அவர் அடுத்ததாக மலையாள திரையுலகின் இரண்டாம் நிலை நடிகரான ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார். அதையடுத்து வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' என்கிற படத்தை இயக்கினார். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கைகோர்ப்பார் என்று பார்த்தால் அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலியை வைத்து தற்போது மிராஜ் (மிரட்சி) என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜித்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.