ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையுலகில் நடிகர்கள் துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் 15 வருடங்களுக்கு முன்பே தங்களது நடிப்பு பயணத்தை துவங்கி விட்டார்கள். அதேசமயம் மோகன்லாலின் மகன் பிரணவ் தனது திரைப்பயணத்தை லேட்டாக அதுவும் ஒரு உதவி இயக்குனராக துவங்கினாலும், பின்னர் தனது தந்தை வழியில் அவரும் ஒரு நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் துல்கர், பஹத் பாசில் போல திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஒரு அழுத்தமான இடத்தை அவரால் பெற முடியவில்லை.
சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில் கூறும்போது கூட, “என் மகன் இப்போதுதான் பயணிக்க துவங்கியுள்ளார். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும்.. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்றார்போல், நடிப்பை விட தேசாந்திரி போல ஊர் உலகம் சுற்றுவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் பிரணவ் மோகன்லால்.
அதேசமயம் கடந்த வருடம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் நடித்த பிரணவ் அடுத்ததாக மம்முட்டியை வைத்து பிரம்மயுகம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற ஆரம்பித்துள்ளது. பிரம்மயுகம் படம் போல இதுவும் ஹாரர் பின்னணி கொண்ட கதைக்களம் தான் என்று சொல்லப்படுகிறது.