ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் தான் இதுவரை வெளியாகி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் டைரக்ஷனில் வெளியான 'எல்2 எம்புரான்' திரைப்படத்தில் இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் இந்த காட்சிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் நிருபர்கள் எம்புரான் பட சர்ச்சை குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து அதுபற்றியே கேட்ட நிருபரிடம் பாசிட்டிவான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறி பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
பொதுவாகவே மோகன்லால் மீது மிகப்பெரிய நட்பும் மரியாதையும் கொண்டுள்ள சுரேஷ்கோபி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக நடிகர் சங்கம் சர்ச்சையில் சிக்கியபோது கூட அதன் தலைவரான மோகன்லாலுக்கு ஆதரவாகவே நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.