படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் தான் இதுவரை வெளியாகி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் டைரக்ஷனில் வெளியான 'எல்2 எம்புரான்' திரைப்படத்தில் இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் இந்த காட்சிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் நிருபர்கள் எம்புரான் பட சர்ச்சை குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து அதுபற்றியே கேட்ட நிருபரிடம் பாசிட்டிவான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறி பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
பொதுவாகவே மோகன்லால் மீது மிகப்பெரிய நட்பும் மரியாதையும் கொண்டுள்ள சுரேஷ்கோபி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக நடிகர் சங்கம் சர்ச்சையில் சிக்கியபோது கூட அதன் தலைவரான மோகன்லாலுக்கு ஆதரவாகவே நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.