பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அந்த பள்ளியில் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் படித்து வந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் விரைந்து சென்று ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தனது மகனை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
தீ விபத்து என்றாலும் மகன் கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதை தொடர்ந்து பவன் கல்யானின் மனைவி அன்னா லெஷ்னேவா சமீபத்தில் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அது மட்டுமல்ல அன்றைய தினம் பக்தர்களுக்கான 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னதான செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி தன் வேண்டுதலை நிறைவேற்றினார் பவன் கல்யாணின் மனைவி. இது அங்கே வந்திருந்த பக்தர்களை நெகிழ வைத்தது.