ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே இப்படி மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.
அந்த வகையில் தற்போது ராம்சரணின் மெழுகு சிலையும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வரும் மே ஒன்பதாம் தேதி மாலை 6:15 மணிக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுசிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்திற்கு அது கொண்டு சென்று வைக்கப்பட இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராம்சரணுடன் செல்லமாக தான் வளர்த்து வருகின்ற ரைம் என்கிற நாய்க்குட்டியையும் அவர் தனது கைகளில் வைத்திருப்பது போல சேர்த்து மெழுகு சிலையாக வடித்து உள்ளார்களாம். இதற்கு முன்னதாக இரண்டாம் ராணி எலிசபெத் தனது செல்லப்பிராணியான கார்கியை தன் கைகளில் வைத்திருப்பது போன்ற சிலை இடம்பெற்றிருந்தது. அவருக்குத்தான் முதன் முதலில் இப்படி ஒரு மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கு அடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக, உலக அளவில் இரண்டாவதாக இந்தப் பெருமை ராம்சரணுக்கும் அவரது செல்லப்பிராணிக்கும்தான் கிடைத்துள்ளதாம்.