ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 70 - 80களின் பின்னணியில் உருவான இந்த படம் காதல், ஆக்ஷன் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகி இருந்தது. இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆவ்னி என்கிற சிறுமி நடித்திருந்தார். அந்த படத்தில் தீ விபத்து சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கும் போது அவருக்கு கைகளிலும் கண் புருவம் மற்றும் தலைமுடி ஆகியவற்றில் சின்ன சின்ன தீக்காயங்கள் ஏற்பட்டன. அதை பார்த்து பதறிப்போன படக்குழுவினர் அவரை சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கும்படி கூறினார்கள். ஆனாலும் அந்த சிறுமி அதை மறுத்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து துணிச்சலுடன் நடித்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த சிறுமியை மேடைக்கு அழைத்து அவரின் துணிச்சலை நடிகர் சூர்யா பாராட்டி பேசினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்த ஆவ்னி வேறு யாருமல்ல, மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர் என்பவரின் மகள் தான். தற்போது படம் வெளியாகி தனது மகளிண் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வரும் நிலையில் சூர்யா இப்படி தன் மகளை பாராட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி நாயர்.
மேலும் இது பற்றி கூறும்போது, 'அந்த படப்பிடிப்பு சமயத்தில் என் மகள் காயம் பட்டாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து காட்சிகளின் நடித்தார். சினிமாவின் மீது அந்த அளவிற்கு அவர் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமல்ல இப்படி அவருக்கு காயம் ஏற்பட்ட விவரம் தெரிய வந்தவுடன் நடிகர் மம்முட்டி உடனடியாக தொடர்புகொண்டு, குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறி அங்கே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆலோசனை அளித்தார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் அஞ்சலி நாயர்.