Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி

05 ஜூன், 2025 - 06:28 IST
எழுத்தின் அளவு:
Sexual-harassment-cases-should-be-closed-in-bulk-Female-director-responds-to-Parvathys-comment

மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் இருக்கிறது என கடந்த வருடம் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து சில பெண்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறி, சில நடிகர்கள், இயக்குனர் மீது புகார் கொடுத்தனர். அதுமட்டும் இன்றி ஹேமா கமிஷன் அறிக்கை அடிப்படையில் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. அந்த வகையில் மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 35 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக சமீபத்தில் காவல்துறை தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் பெரிய மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த பலருக்கும் இது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே சினிமா பெண்கள் நல அமைப்பு மூலமாக மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்த விசாரணை கமிஷன் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது இத்தனை வழக்குகளை முடித்துவிட்டு அரசு கொள்கை முடிவு எடுத்து அதன் மூலம் திரை உலகில் மாற்றத்தை கொண்டு வரும் என்றால் அது சாத்தியமா? ஏற்கனவே இந்த அறிக்கை வருவதற்கு ஐந்தரை வருடங்கள் ஆகிவிட்டது இந்த வேகம் போதுமா ? என்று கேரள அரசை கிண்டலடிக்கும் விதமாக கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் பெண் இயக்குனரான விது வின்சென்ட் என்பவர் அரசுக்கு ஆதரவாகவும் நடிகை பார்வதி போன்று இந்த விஷயத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புவோர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் இது குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்கள். ஹேமா கமிஷன் விசாரணையின் போது பல குற்றச்சாட்டுகளை கூறியவர்களும் அந்த அறிக்கை வெளியான பிறகு பல பேர் மீது புகார் கொடுக்க வந்தவர்களும் தொடர்ந்து தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. மற்றும் வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தில் சந்திக்க முன்வரவில்லை. அப்படி இருக்கும் நிலையில் அரசு எப்படி இந்த வழக்கை முன்னோக்கி எடுத்துச் சொல்ல முடியும். இந்த விஷயத்தில் காவல்துறையும் அரசு எடுத்துள்ள முடிவு முழுவதும் லாஜிக்காக, புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கை நடத்துவது சிரமம். அதனால் தான் அரசு கொள்கை ரீதியாக ஒரு முடிவை எடுப்பதாகவும் அது குறித்து ஆலோசிக்க திரைப்பட சங்கங்களுடன் கூட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இது சரியான நடைமுறை” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறுவயது தோழி மறைவு : சோகத்தில் ஷோபனாசிறுவயது தோழி மறைவு : சோகத்தில் ஷோபனா நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in