இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
மலையாளத்தில் பிரபல நடிகரும், தற்போதைய மத்திய இணைய அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ் கோபி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள படம் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) இந்த படம் இன்று (ஜூன் 27) ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் சில நாட்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழும் பெற்ற நிலையில் படத்தின் டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் தர முடியும் என சென்சார் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனராம். ஆனால் அதை எழுத்துப்பூர்வமாக கொடுக்காமல் வாய்மொழியாக கூறியுள்ளனர். படத்தின் பெயரை மாற்ற விரும்பாமல் தற்போது மறு தணிக்கைக்காக ஜேஎஸ்கே படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன் தனது சோசியல் மீடியா பதிவில் கூறும்போது, “இந்த படத்தில் எந்த ஒரு மதத்தின் பெயரையோ கடவுளையோ புண்படுத்தும் விதமாக காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தால் சென்சாரில் எப்படி எங்களுக்கு எந்த வெட்டும் இல்லாமல் படத்தை திரையிட சம்மதித்திருப்பார்கள். அவர்களுக்கு ஜானகி என்கிற பெயரை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெயராக பட டைட்டிலில் வைக்கக்கூடாது என்பதுதான் எண்ணம். திரைப்படங்களுக்கு கடவுள்களின் பெயர்களை வைக்கக்கூடாது என்று கூறுவதற்கு இங்கே ஒன்றும் தலிபான்கள் ஆட்சி செய்யவில்லையே?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.