ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மலையாள திரையுலகில் பிரபல நடிகர்களில ஒருவர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தற்போது கத்தனார் என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் வெள்ளியன்று காலை கண்ணூர் அருகில் உள்ள கோட்டியூரில் உள்ள மகா சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார் ஜெயசூர்யா.
அப்போது கோவில் தேவஸ்தான நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்த புகைப்படக்காரரும் பத்திரிகையாளருமான சஜீவ் நாயர் என்பவர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்தார். அப்போது ஜெயசூர்யாவுடன் வந்திருந்த நபர்களில் மூன்று பேர் அவர் புகைப்படம் எடுத்ததை தடுத்து கேமராவை பிடுங்கி சேதப்படுத்தியதுடன் சஜீவ் நாயரின் வயிற்றிலும் குத்தி அவரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தேவஸ்தான மருத்துவமனையில் சஜீவ் நாயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கியவர்கள் மீது காவல்துறையிலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தேவஸ்தான மூலம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞர் நான். ஜெயசூர்யா இன்று கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக கோவில் நிர்வாக அதிகாரியிடம் இருந்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே நான் அவரை புகைப்படம் எடுக்க முயன்றேன். என்னை தாக்க வந்தவர்களிடம் கூட என்னுடைய அடையாள அட்டையை காட்டியும் அவர்கள் என்னை தாக்கி எனது கேமராவையும் சேதப்படுத்தி உள்ளார்கள்” என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.