பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மலையாளத்தில் கடந்த 2021ம் வருடம் சுருளி என்கிற படம் வெளியானது. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களங்களில் படம் எடுக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதை இயக்கியிருந்தார். ஜோசப் மற்றும் பணி படங்கள் புகழ் நடிகரும், தமிழில் ஜகமே தந்திரம், ரெட்ரோ, சமீபத்தில் வெளியான தக்லைப் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இதில் கொஞ்ச நேரமே வந்து செல்லும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் நேரடியாக திரைப்பட விழாக்களில் வெளியாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத் தொகை கொடுக்கப்படாமல் பாக்கி இருக்கிறது என்று ஜோஜூ ஜார்ஜ் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அது மட்டுமல்ல இந்த படம் விருது விழாக்களுக்கு மட்டுமே திரையிடப்பட இருக்கிறது என்று கூறி படத்தில் இடம்பெற்ற கொச்சையான வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். ஆனால் திடீரென தியேட்டரில் வெளியிடுவதாக கூறி அதிர்ச்சி அளித்தார்கள் என்றும் கூறியிருந்தார் ஜோஜூ ஜார்ஜ். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, ஜோஜூ ஜார்ஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “வெறும் மூன்று நாட்கள் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜோஜூ சார்ஜுக்கு 5.9 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல அவர் சொல்வது போல இந்த படம் இப்போது வரை தியேட்டர்களில் வெளியாகவில்லை. திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் திரையரங்குகளில் இதை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சனையை தேவையில்லாமல் இன்னும் வளர்க்க வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கி உள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.