வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ரொம்பவே குறைவான சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் ஒன்று நடிகர் மம்முட்டிக்கு தற்போது கிடைத்துள்ளது. மம்முட்டி சினிமாவில் நுழைவதற்கு முன்பு எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலைக்கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு அரசு கலைக்கல்லூரியில் சட்டம் படித்தார். இந்த நிலையில் தற்போது மகாராஜா கலை கல்லூரியில் மம்முட்டியின் திரையுலக வாழ்க்கை ஒரு பாடமாக பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
நான்கு வருட பிஏ வரலாறு (ஹானர்ஸ்) படிப்பை படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கான 'ஹிஸ்டரி ஆப் மலையாளம் சினிமா' என்கிற புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மம்முட்டி மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முதன்முதல் பட்டம் வாங்கிய தாட்சாயினி வேலாயுதம் என்கிற பெண்ணின் வாழ்க்கையும் இதே வருடத்திற்கான இந்திய சமூக அரசியல் என்கிற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.