இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கியிருந்தார். இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் சிதம்பரம். இந்த படத்தின் கதையை கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் தான் எழுதி இருக்கிறார். இன்னொரு பக்கம் இதே ஜித்து மாதவன் தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.