வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கன்னட சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் பாவனா ராமண்ணா. தமிழில் அன்புள்ள காதலுக்கு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 40 வயதான பாவனா இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 40 வயதை நெருங்கியபோது, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவு சாதாரணமாக நடக்கவில்லை. செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாத பெண் என்ற ஒரே காரணத்தை சொல்லி அனைவரும் என்னை நிராகரித்தனர். எனது விருப்பத்துக்கு தடை போட்டனர். தற்போது தடைகளை தாண்டி இரட்டை குழந்தைகளுக்கு அம்மா ஆகப்போகிறேன். என்கிறார் பாவனா.