ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பெங்களூரு ரசிகர்களோ, ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூருவில் உள்ள பிருந்தா தியேட்டரில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவில் மகேஷ் பாபுவின் மகனான கட்டமனேனி கவுதம் கிருஷ்ணாவின் 35 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் வைத்து அவருக்கு ஒரு விழா நடத்துகிறார்களாம். தற்போது மகேஷ் பாபுவின் மகன் அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பை படித்து வருவதோடு, தான் நடிக்கும் சில வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவார் என்றும் கூறப்படுகிறது.