தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கடந்த மாதம் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட லோகா சாப்டர் 1 : சந்திரா என்கிற திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கினார். இதில் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் நடிகை சாந்தி பாலச்சந்திரன். 270 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடித் காசி, என் மன வானில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினயன் இந்த படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “என் மூளையில் உருவாகி இருந்த ஒரு கதையை திருடி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. தானும் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் லோகா படக்குழுவினர் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பு மிக சிறப்பு'' என்று பாராட்டியுள்ளார் வினயன்.