தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் காந்தாரா படம் உருவாதற்கு காரணமான தனது சொந்த கிராமமான குந்தபுராவில் குடும்பத்துடன் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி.
தனது கிராமும், தனது குலதெய்வ கோயிலும்தான் தனக்கு பெரிய வாழ்க்கை கொடுத்ததாக நம்பும் ரிஷப் ஷெட்டி அதற்காக அந்த கிராமத்திலேயே வாழ முடிவு செய்து பெங்களூருவில் தான் வசித்த சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக விட்டிற்கு செல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது மண்ணின் பெருமையை 'காந்தாரா' மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே'' என்றார்.