சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

தற்போது தெலுங்கில் ‛விஸ்வாம்பரா, மன சங்கர வர பிரசாத் காரு' போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆன்லைனில் ஆடை விற்பனை செய்பவர்கள் தனது அனுமதியின்றி தன்னுடைய பெயர், குரல், புகழ் போன்ற அடையாளங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற விளம்பரங்கள் எனது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் பெயர், அடையாளம், புகைப்படம், குரல் போன்றவற்றை வர்த்தக ரீதியாக அவரது அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.