துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமீபத்தில் கேரளாவில் சையத் முஸ்தாக் அலி ட்ராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை சேர்ந்த முகமது அசாருதீன் என்கிற இளம் கிரிக்கெட் வீரர் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின்பாலி இவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீனின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிவின்பாலி, இது குறித்து கூறும்போது, “என்ன ஒரு அடி அசாருதீன்....!! வாழ்த்துக்கள் பிரதர்” என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 1983 என்கிற படத்தில் கிராமத்து கிரிக்கெட் வீரராக நிவின்பாலி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.