இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் கேரளாவில் சையத் முஸ்தாக் அலி ட்ராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை சேர்ந்த முகமது அசாருதீன் என்கிற இளம் கிரிக்கெட் வீரர் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின்பாலி இவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீனின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிவின்பாலி, இது குறித்து கூறும்போது, “என்ன ஒரு அடி அசாருதீன்....!! வாழ்த்துக்கள் பிரதர்” என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 1983 என்கிற படத்தில் கிராமத்து கிரிக்கெட் வீரராக நிவின்பாலி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.