பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

கேரளாவை பொறுத்தவரை இன்னும் கொரோனா தாக்கத்தை சீரியஸாகவே அணுகி வருவதால் தியேட்டர்கள், திருவிழாக்கள், பொது கூட்டங்கள் என மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதில் மிகுந்த கண்டிப்பு காட்டி வருகிறது. அதேசமயம் கேரள முதல்வரின் தலைமையிலேயே மலையாள திரையுலகின் 2020ஆம் வருடத்திற்கான கேரள அரசு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 50வது கேரள அரசு விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் பினராயி விஜயனே கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் மூத்தோன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதை நடிகர் நிவின்பாலி பெற்றுக்கொண்டார்.