தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கேரளாவை பொறுத்தவரை இன்னும் கொரோனா தாக்கத்தை சீரியஸாகவே அணுகி வருவதால் தியேட்டர்கள், திருவிழாக்கள், பொது கூட்டங்கள் என மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதில் மிகுந்த கண்டிப்பு காட்டி வருகிறது. அதேசமயம் கேரள முதல்வரின் தலைமையிலேயே மலையாள திரையுலகின் 2020ஆம் வருடத்திற்கான கேரள அரசு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 50வது கேரள அரசு விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் பினராயி விஜயனே கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் மூத்தோன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதை நடிகர் நிவின்பாலி பெற்றுக்கொண்டார்.