தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில், தனது தந்தையின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் டொவினோ தாமஸ். ஆச்சர்யமான செய்தியாக கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழன் விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதேசமயம் படத்தின் நாயகன் டொவினோவுக்கும், விஷ்ணு ராகவுக்கும் இடையே ஒரு ஆச்சர்யமான பந்தமும் உள்ளது.
நடிகர் ஆவதற்கு முன்பாக, கடந்த 2012ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான தீவ்ரம் என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் டொவினோ தாமஸ். அந்தப்படத்தில் நடிகராக நடித்தவர் தான் விஷ்ணு ராகவ். அதன்பின், இயக்குனராவதற்கு முதல்படியாக 2013ல் விஷ்ணு ராகவ் நடிப்பில் ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டிருந்தார் டொவினோ தாமஸ். ஆனால் அது கைகூடாமல் போனது. அதேசமயம் இந்த எட்டு வருடங்களில் சூழல் அப்படியே தலைகீழாக மாறி, டொவினோ தாமஸ் ஹீரோவாகி விட்டார். நடிக்க வந்த விஷ்ணு ராகவ் இப்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனராக மாறிவிட்டார்.