நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கேரளாவில் எண்பதுகளில் பிரசித்தி பெற்ற கொள்ளையனான சுகுமார குறூப் என்பவனின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள துல்கர் அந்தப்படத்தை முடித்து விட்டார். அதற்கு அடுத்த படத்தில் அப்படியே நேர்மாறாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.
சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
குறூப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா என்பவர் நடித்துள்ளார். அதேபோல சல்யூட் படத்திலும் பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்க இருக்கிறாராம். இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.