தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எந்த மாநிலமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவது, குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆந்திர போக்குவரத்து போலீஸார் இதற்காக என்னவெல்லாமோ விழிப்புணர்வு விஷயங்களை அமல்படுத்தியும் ஹெல்மெட் அணிவதை பெரிய அளவில் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
அதாவது பரத் ஆனே நேனு என்கிற படத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முதல்வராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. அப்படிப்பட்டவர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினால், வாகன ஓட்டிகள், குறிப்பாக அவரது ரசிகர்களாவது அதை பின்பற்றுவார்கள் என நினைத்தனர் போக்குவரத்து போலீஸார். அதன்படி மகேஷ்பாபு ஹெல்மெட் அணிந்தபடி வண்டி ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.