துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிக்க வந்து ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யமாக இவர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் சன்னி வெய்ன் என்பவர். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாரி நிவின்பாலியை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
எப்படி தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது தனது நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர் இருப்பது போல பார்த்துக் கொள்கிறாரோ, அதேபோலத் தான் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது நட்பு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இவர்கள் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.