ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளம் வந்தாலும் கூட நடிகை ஆலியா பட்டுக்கு குழந்தை மனம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதம் ஐராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்த அவர், நடிகர் மகேஷ்பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது மகள் சிறுமி சித்தாராவை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு தான் வாங்கிச்சென்றிருந்த ஆடையை பரிசளித்தார்.
இதோ இப்போது துல்கர் சல்மானின் மூன்று வயது மகளான மரியமுக்கு அழகழான ஆடைகளை கிப்ட் பார்சலாக அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த ஆடைகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான். துல்கரும் ஆலியாவும் இணைந்து படம் எதிலும் நடித்ததில்லை. மிகப்பெரிய பழக்கமும் இல்லை.. பின் ஏதற்காக கிப்ட் அனுப்பியுள்ளார் தெரியுமா..?
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துல்கர் சல்மான் அளித்த ஒரு பேட்டியில், தனது மகளை ஆலியா பட் போல வளர்க்க போகிறேன் என கூறியிருந்தார். அந்த பேட்டியை ஏதேச்சையாக பார்த்த ஆலியா பட், துல்கர் சல்மானின் அந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து போய், அவரது மகளுக்கு ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்தாராம்.