துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
2021ஆம் வருடத்திற்கான கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று சம்பிரதாய துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னை அழைக்காமல் விழாக்குழுவினர் அவமதித்து விட்டார்கள் என தேசிய விருதுபெற்ற பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வயதானவன் என காரணம் காட்டி இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பாமல் அவமரியாதை செய்துள்ளனர். என்னைவிட ஓரிரு வயதே குறைவான, கல்லூரியில் எனது ஜூனியர்களாக படித்த இயக்குனர் அமல் நீரத், ஆஷிக் அபு ஆகியோரை எல்லாம் அனுமதித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசிய விருது பெற்ற எனக்குத்தான் இந்த விழாவில் கலந்துகொள்ள அதிக உரிமை இருக்கிறது. என்ன செய்வது இங்கேயும் அரசியல் நுழைந்து விட்டது” என வருத்தத்துடன் கூறியுள்ளார் சலீம்குமார்.