லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
இந்தியில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் என நட்சத்திர பட்டாளத்துடன் நடிகர் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. புராணக்கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 2003ல் வெளியான கார்கில் படத்திற்கு பிறகு நாகர்ஜுனா இந்தியில் நடித்துள்ள படம் இது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தனக்கு ரொம்பவே ஏமாற்றம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா. காரணம் இந்தப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கப்போகும் ஆசையில் இருந்தாராம். ஆனால் இருவர் நடித்த காட்சிகளையும் தனித்தனியாகவே படமாக்கினார்களாம்.. அதனால் ஒரு காட்சியில் கூட அமிதாப்புடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் நாகர்ஜுனா. இருவரும் தனித்தனியாக நடித்த காட்சிகளை விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக ஒன்றிணைத்துக்கொள்ள இருக்கிறார்களாம்.