சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதேசமயம் அல்லரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓரளவு எதிர்பார்ப்புடன் வெளியான நாந்தி என்கிற படமும் மவுத் டாக் மூலமாக பிக் அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது.
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியாக அல்லரி நரேஷும், அவரை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.