ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தில் ஜுன் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக், ஆந்திர அரசு தரப்பிலிருந்து பவன் கல்யாண் சார்பாக எழுந்த விமர்சனத்தால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. 'ஹரிஹர வீரமல்லு' வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.