லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரமாண்டமான வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ் தேதியை மாற்றப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை முன் கூட்டியே, அதாவது மே-13ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். காரணம் மோகன்லால் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிடியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் அனைத்து தரப்பினருக்குமே நல்ல லாபம் கிடைத்திருக்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் வருத்தத்துடன் கூறப்படுகிறது. த்ரிஷ்யம்-2வுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மரைக்கார் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து தியேட்டர் உரிமையாளர்களை சமாதனப்படுத்துவதுடன் நல்ல வசூலையும் பார்க்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.