தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நான் ஈ பட நாயகனான நானி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தற்போது ஷியாம் சிங்கா ராய், ஆன்டே சுந்தரனிகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு இன்னொரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். சுதாகர் செருகுரி என்பவர் தயாரிக்கும் அப்படத்தில் நடிக்க ரூ.14 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் நானி.
இதுவரை 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நானி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்துள்ளன. ஆனபோதிலும் தனது புதிய படத்தில் நடிக்க அவர் ரூ. 14 கோடி சம்பளம் பேசியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.