இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தியேட்டர்களுக்கு நேரடியாக சென்று, வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்கு, ஆன்லைன் புக்கிங் என்பது ஒரு வரப்பிரசாதம் தான்.. ஆனால் அதையே சாக்காக வைத்து படத்தின் டிக்கெட் கட்டணத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத தொகையை, இணையதள சேவை கட்டணம் என்கிற பெயரில் வசூலித்து வருகின்றன ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள்.. இதில் குறிப்பிட்ட அளவு பங்குத்தொகை கிடைப்பதால், இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக டிக்கெட் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ரூபாய் புக்கிங் கட்டணமாக வசூலித்தனர். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக சூழல் மாறியுள்ளதால், அதில் சற்று குறைத்து அதிகபட்சமாக 28 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்தநிலையில் ஆந்திராவை சேர்ந்த விஜயகோபால் என்பவர், இந்த ஆன்லைன் கட்டணம் என்பது பகல் கொள்ளை, வாடிக்கையாளர்களின் உரிமையை மீறும் செயல் என்று கூறி, ஐதராபாத் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்படி கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களில் ஒன்றான 'புக் மை ஷோ' நிறுவனத்தின் மீதும் இந்த கட்டண கொள்ளைக்கு உடந்தையாக செயல்படுவதாக பிவிஆர் சினிமா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் புக்கிங் நிறுவனமான 'புக் மை ஷோ' மற்றும் பிவிஆர் சினிமா ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராத தொகை விதித்துள்ளது, மேலும் பாதிக்கப்பட மனுதாரர் விஜயகோபாலுக்கு ரூ.25000 நஷ்ட ஈடாகவும் ரூ.1000 வழக்கு செலவு தொகையாகவும் கொடுக்கும்படி இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று விஷயங்களில் 6 ரூபாய்க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் கூறியுள்ளது.