தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு நடிகர் சிரஞ்ஜீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடிக்கும் படம் ஆச்சார்யா. படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. கொரடலா சிவா இயக்கும் இந்தப் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. சண்டை காட்சிகள் சிலவும், ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்று மட்டும் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபாஷனாவும் கவனித்து வருகின்றனர். இதனால் பவன் கல்யாண், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது.
ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் ஆச்சார்யா படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த ஆண்டு மே மாதம் வெளிவருவதாக இருந்த இந்தப் படம், நவம்பர், அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.