துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாணையும் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் ராம்கோபால் வர்மா.
அதாவது, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள போட்டோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் எது போலி என்பதை எனக்கு சொல்லுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு பரிசு தருவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆர்ட் டைரக்சனில் ஏதோ தவறாக உள்ளது. ராஜ மவுலி சார் தயவு செய்து உங்களது ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று ராஜமவுலியிடம் கேட்பது போலவும் பதிவிட்டு அவரையும் இந்த சர்ச்சைக்குள் இழுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.