தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாணையும் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் ராம்கோபால் வர்மா.
அதாவது, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள போட்டோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் எது போலி என்பதை எனக்கு சொல்லுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு பரிசு தருவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆர்ட் டைரக்சனில் ஏதோ தவறாக உள்ளது. ராஜ மவுலி சார் தயவு செய்து உங்களது ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று ராஜமவுலியிடம் கேட்பது போலவும் பதிவிட்டு அவரையும் இந்த சர்ச்சைக்குள் இழுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.