மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா |

வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையும் அது ஏற்படுத்திவரும் பாதிப்பும் கடந்த வருடத்தை விட வீரியமாகவே இருக்கிறது. இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தரப்பில் இருந்தும் திரையுலக பிரபலங்கள் தரப்பில் இருந்தும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என கூறி சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு..
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடுபவர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். முன்னெப்போதையும் விட இப்போது பிளாஸ்மா தானம் தருபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து கமிஷனர் சஜ்ஜனார் துவங்கி வைத்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். நீங்களும் பிளாஸ்மா தனம் செய்யுங்கள்.. பலரது வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.