ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையும் அது ஏற்படுத்திவரும் பாதிப்பும் கடந்த வருடத்தை விட வீரியமாகவே இருக்கிறது. இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தரப்பில் இருந்தும் திரையுலக பிரபலங்கள் தரப்பில் இருந்தும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என கூறி சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு..
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடுபவர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். முன்னெப்போதையும் விட இப்போது பிளாஸ்மா தானம் தருபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து கமிஷனர் சஜ்ஜனார் துவங்கி வைத்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். நீங்களும் பிளாஸ்மா தனம் செய்யுங்கள்.. பலரது வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.