சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையும் அது ஏற்படுத்திவரும் பாதிப்பும் கடந்த வருடத்தை விட வீரியமாகவே இருக்கிறது. இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தரப்பில் இருந்தும் திரையுலக பிரபலங்கள் தரப்பில் இருந்தும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என கூறி சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு..
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடுபவர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். முன்னெப்போதையும் விட இப்போது பிளாஸ்மா தானம் தருபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து கமிஷனர் சஜ்ஜனார் துவங்கி வைத்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். நீங்களும் பிளாஸ்மா தனம் செய்யுங்கள்.. பலரது வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.