இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில் வெளியான 'த்ரிஷ்யம்-2விலும் நடித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, 'பீஸ்' என்கிற படத்தில் தன்னெழுச்சியாக உயர்ந்த தொழிலதிபராக நடித்து வருகிறார் ஆஷா சரத். 'வீட்டிலே ஊனு' என்கிற பெயரில் சிறிய அளவில் உணவகம் ஆரம்பித்து, அதை தானே, ஆட்டோவில் ஏற்றி பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முன்னேறுபவராக நடித்துள்ளார் ஆஷா சரத்.. இதற்காக ஆட்டோ ஒட்டி பழகிய ஆஷா சரத், படப்பிடிப்பின்போது எவ்வித பயமும் இன்றி ஆட்டோ ஒட்டியதை பார்த்து படக்குழுவினரே வியந்து போனார்களாம்.