தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் 40 சதவிகிதம் படப்பிடிப்பை முடித்து விட்டனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31-ந்தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் மகேஷ்பாபு. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மே 31-ந்தேதியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்துள்ளார் மகேஷ்பாபு. அதாவது, மே 31-ந்தேதி டீசருக்கு பதிலாக இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும். அதோடு, கொரோனா அலை ஓய்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு டீசர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.