முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாகவே வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி விட்டது 'விராட பர்வம்'.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. மேலும் சீனியர்களான பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு, கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்தப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக ஒடிடி தரப்பில் நல்ல விலை தருவதற்கு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால் இந்தப்படம் கூடிய விரைவில் ஒடிடியில் வெளியாகலாம் என்றும் ஒரு செய்தி கடந்த நாட்களாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா, விராட பர்வம்' படம் ஒடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை. நிலைமை ஓரளவு சீரானதும், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.