பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

வக்கீல் சாப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒருபக்கம் அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் நடிகர் பவன் கல்யாண்.. இன்னொரு பக்கம் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பவன் கல்யாணை வைத்து குஷி, பங்காரம் ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு பவன் கல்யாணை வைத்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கிரிஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தநிலையில் கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா, அல்லது படமே கைவிடப்பட்டு விட்டதா என பவன் கல்யாணின் ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. தற்போது அவர்களது சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லும் விதமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப்படம் குறித்து அப்டேட் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறியுள்ளார் ஏ.எம்.ரத்னம்,