'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

சென்னை: நடிகர் மம்மூட்டி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி, நில நிர்வாக கமிஷனர், 2021 மார்ச்சில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.