பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் அருண் விஜய். தன்னுடைய படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ட்விட்டர் பக்கம் மூலமாகத்தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அருண் விஜய், ட்விட்டர் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுவென்றால் அருண் விஜய், டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.