கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
தனது நிறுவன விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்ற லெஜண்ட் அருள் சரவணன் அண்ணாச்சி ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக சமீபத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பாப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பாடலின் ரெக்கார்டிங் மும்பையில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ், யோகானி மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாடகி யோகானி சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து தமிழில் பாட வைத்திருப்பதால் ஈழத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.