தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே படம் துவங்கி தற்போது வரை மிக அதிக அளவிலான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து, தனது இசைக்கு, பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையே பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல பரபரப்பாக அவர் இயங்கவில்லை என்றாலும் செலெக்ட்டிவ்வான படங்களுக்கு தற்போது அவர் இசையமைக்க வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்றிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அங்கே டோரண்டோவில் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். இதனை தொடர்ந்து கனடா அரசு அவருக்கு நினைவு பரிசு வழங்கி அவரை கவுரவித்து உள்ளது. இது குறித்த தகவலையும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
கனடா அரசு வழங்கிய அந்த சான்றிதழில், “உங்களுடைய மறக்க முடியாத பாடல்களாலும் புதுவிதமான இசை பாணியினாலும் நீங்கள் தமிழ் இசையை உலக அளவில் சென்றடைய செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, பல புதிய இளம் தலைமுறை கலைஞர்கள் உருவாவதற்கும் தூண்டுதலாக இருந்திருக்கிறீர்கள். டோரண்டோவில் உங்களது வருகை என்பது இசையை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பெருமையான நிகழ்வும் கூட. நீங்கள் இந்த கலையின் மூலமாக ரசிகர்களுக்கு கொண்டுவந்து தந்த மகிழ்ச்சி, உணர்வு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.