அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

'கூலி' படத்தை அடுத்து தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் முன்வந்த போது அதை தவிர்த்து விட்டார் ரஜினி.
இந்த நிலையில் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவரை கவுரவிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டு விழா வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த விழாவில் கவரவிக்கப்பட உள்ளார்.
அதாவது, ரஜினிகாந்த் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் என்றால் பாலகிருஷ்ணாவோ 1974ம் ஆண்டிலேயே 'தத்தம்மா காலா' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். அந்த வகையில் ரஜினியை போலவே பாலகிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் நவம்பர் 28ம் தேதி கோவாவில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.